புகழ் பெற்ற எழுத்தாளர் சிவ . தணிகாசலத்தின் “செவாலியார் இளவாலை அமுது” நூல் வெளியீட்டு.

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிவ . தணிகாசலம் எழுதிய “செவாலியார் இளவாலை அமுது” நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இணுவில் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் தேவராஜா தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

தலைமை உரையை ஆற்றிய யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி தேவராஜா பிரித்தானியாவில் வசிக்கும் பிரபலமான எழுத்தாளர் சிவ தணிகாசலம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்.

தனது “செவாலியார் இளவாலை அமுது” என்னும் நூலினை 2021 ஆண்டு பிரித்தானியாவில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் முதல் பிரதியை வெளியிட்டவர் .

2022 ஆம் ஆண்டு இந்தியா பாண்டிச்சேரியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நூலை வெளியிட்டதுடன் மூன்றாவதாக யாழ்ப்பாணம் இணுவில் பொது நூலகத்தில் இன்று வெளியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஆசி உரையை சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் நிகழ்த்தினார்.

வாழ்த்துரையை ஏசிரி கல்வி நிலைய அதிபர் இரா அருட்செல்வம் நிகழ்தியதுடன் முதற்பிரதியை பெற்றதுடன் இராமலிங்கம் மகாராஜா பெற்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.