1550 கிலோ எடையுடைய வாகனத்தை தாடியால் 400 மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை!

யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ். மட்டுவில் ஐங்கரன் சன சமூக நிலைய முன்றிலில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

https://www.facebook.com/100010809667320/videos/pcb.1901976643505973/761141445804814

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும், சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரி நிர்வாகியும் கொக்குவில் நாமகள் வித்தியாலய அதிபருமாகிய லயன் றஜீபன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் அதிதிகளாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் ம.விஜயகாந்த், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தி.தங்கவேலு, ஊடகவியலாளர் முகுந்தன், சாதனையாளரின் நண்பன் தையிட்டி இ.சிவானந்தம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கை கிளை தலைவர் யோ.யூட் நிமலன், சந்திரபுரம் கிராம அலுவலர் சுபாசன் ஆகியோரும் சாதனை படைக்கும் நிகழ்வில்  இணைந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.