இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ அமைப்புக்கள் கோரிக்கை!!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழிலுள்ள சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

( அண்மையில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றபோது அதில் பேசப்பட்ட விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

அதில், 13 வது திருத்தச் சட்டம் தமிழரின் இனப் பிரச்சனை மற்றும் முல்லத்தீவு  புதைகுழி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது.

நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லுள்ள நிலையில் 13 தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு தமிழ் கட்சிகள் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

 

மீனவ சங்கங்களாகிய நாம் ஒன்றை கேட்க விரும்புகிறோம், இந்தியாவின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

 

இவ்வாறான நிலையில் எமது மீனவர் பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய இந்திய இழவைப் படகுகளை தடை செய்வது தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதங்கள் அனுப்புவதாகத் தெரியவில்லை .

 

தமிழ் கட்சிகளிடம் நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம், எமது மீனவ சமூகம் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படக்குகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

 

இந்திய இழுவைப்படகுகளை கடற்படை கைது செய்துவரும்  நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ச்சியாக எல்லை தாண்டிய இந்திய ரோலர்களை கைது செய்ய வேண்டும்.

 

இந்நிலையில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சட்டவிரோத எல்லை தாண்டிய இந்திய ரோலர்களை கைது செய்வதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படைக்கு வழங்க வேண்டும்.

 

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கு பயணம் ஆவதற்கு போதிய கால அவகாசம் இருக்கின்ற நாளையில் தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று எமது பிரச்சனை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட கடற் றொழிலாளர் கூட்டுறவு சங்க  சமாசங்களின் சம்மேளன உப தலைவர்  அந்தோணிப் பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் மற்றும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர்  செல்லத்துரை நற்குணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.