நாடாளுமன்றத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுகிறார்கள்! கபீர் ஹசீம் பெருமிதம்
நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறார்கள். பல சட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.
பல சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து அந்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
மாவனெல்ல பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
போராட்டத்தின் பிரதிபலனாக நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது.
போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரீசிலித்து பல சட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.
பல சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
அதுவும் ஒரு வெற்றியாகும். அதனை போராட்டத்தின் வெற்றியாகவே நான் பார்க்கிறேன். உண்மையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஆட்சிமுறையில் மாற்றத்தையே போராட்டகாரர்கள் கோரினார்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை