மண்டைதீவில் காணி சுவீகரிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தம்

யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் போது கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களை வழங்க முற்பட்ட வேளையில் போராட்டக்காரர்களால் எதிர்ப்புக் கோசங்கள் எழுப்பப்பட்டன.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.