பேருந்தில் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை – இராணுவச் சிப்பாய் கைது
பேருந்தில் பயணித்த துருக்கி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பெயரில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் உள்ளிட்டவர்கள் கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது குறித்த சந்தேகநபர் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் உடலை தடவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை