மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி..T

கொழும்பு – கல்கிஸை பிரதேசத்தில்  மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை பகுதியில் உள்ள இந்த இடத்தில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை கல்கிஸை பொலிஸார் சோதனை நடத்தியபோதே சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி | A Brothel Masquerading As A Massage Parlor

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27, 41 மற்றும் 67 வயதுடைய பயாகல, நொச்சியாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் சந்தேகநபர்கள்    இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.