போதகர் ஜெரோம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சிஐடி!..T

போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன் பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு மில்லியன் கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளதுடன் , வெளிநாட்டு நாணயங்களும் அவரது வங்கிகணக்கிற்கு வந்துள்ளன.

போதகர் ஜெரோம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சிஐடி! | Cit Released Shocking Information Pastor Jerome

வங்கிகணக்கில் மில்லியன் கணக்கான பணம்

 

அவரை பின்பற்றுபவர்களும் நெருங்கிய சகாக்களுமே அதிகஅளவில் பணத்தை வழங்கியுள்ளமையினால் போதகருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதுமட்டுமல்லாது சிஐடியின் சட்டவிரோத சொத்து விசாரணையின் போது ஜெரோம்பெர்ணாண்டோவை பின்பற்றும் 18,000 பேர் அவருக்கு நிதி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

போதகர் ஜெரோம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சிஐடி! | Cit Released Shocking Information Pastor Jerome

 

கட்டுநாயக்காவில் மிராகில் டொம்மை அமைப்பதற்காகவே இந்த பணத்தை அவர்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. போதகர் ஜெரோமை பின்பற்றுபவர்கள் சிலரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள தெரிவித்துள்ள சிஐடியினர்,  நன்கொடையாக பணத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போதகரை பின்பற்றும் 7 நாடுகளில்  உள்ளோர்

பாகிஸ்தான் உட்பட ஏழு நாடுகளில் உள்ளவர்கள் போதகரை பின்பற்றுவதும் அந்த நாடுகளில் இருந்து ஜெரோமின் இலங்கைவங்கி கணக்குகளிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

போதகர் ஜெரோம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சிஐடி! | Cit Released Shocking Information Pastor Jerome

 

அதேசமய்ம போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவை பின்பற்றுபவர்களில் அரசஅதிகாரிகளும் உள்ளனர் அவர்கள் அரசாங்கத்திடமிருந்துதங்களுக்கு கிடைத்த வாகன அனுமதிப்பத்திரங்களை விற்று அதன் மூலம் கிடைத்த நிதியை மிராக்கிள் டொம்மை கட்டுவதற்கு வழங்கியுள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அதேவேளை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மனுத்தாக்கல் செய்திருந்திருந்தார்.

குறித்த மனு, நேற்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.