நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக்கூட்டம் இன்று இடம்பெற்றது

நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14) காலை நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேசத்தின் கடல் போக்குவரத்து, சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.