யாழில் வடக்கின் ஒளிமயம் கண்காட்சி ஆரம்பம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு , விளையாட்டுத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் ஏற்பாட்டில் “வடக்கின் ஔிமயம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் “Global fair 2023” கண்காட்சி இன்று(15) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா , இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜன் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு வேலை.வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள் , சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கி ஆரம்பமாகிய தொழிற் சந்தையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு ஆலோசணைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளே குறித்த கண்காட்சி கூடத்திற்கு விரைந்து கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்திடுங்கள்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.