அஸ்வெசும நலன்புரித் திட்ட மேன்முறையீடுகள்: புதிய பயனாளர் கொடுப்பனவு ஒரே நேரத்திலாம்! நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் கூறுகிறார்

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும். மேன்முறையீடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது. பரிசீலனைகளை தொடர்ந்து பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படும் பயனாளர்களுக்கான  ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத தவணை கொடுப்பனவு ஒரே நேரத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு –

அரச நலன்புரித் திட்ட கொள்கைக்கு அமைய கிடைக்கப் பெற்ற 33 லட்ச விண்ணப்பதாரிகளில் 70 சதவீத சமுர்த்தி பயனாளர் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 லட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த தொகை 16.8 லட்சம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அத்துடன் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளர் குடும்பங்களில் 1,280,747 பேர் காப்புறுதிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதுடன் அவர்களில் 70 சதவீதமான 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி அஸ்வெசும திட்டத்தில் 11 லட்சம் குடும்பங்கள் நிவாரணம் பெற தகுதி பெற்றுள்ளார்கள்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தகுதி இருந்தும் எவரேனும் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 990,000 மேன்முறையீடுகளும், 70,000 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும். மேன்முறையீடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது. பரிசீலனைகளை தொடர்ந்து பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படும் பயனாளர்களின் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத தவணை கொடுப்பனவு ஒரே நேரத்தில் வழங்கப்படும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.