தாமரைப் பூ பறிக்கச்சென்ற இளைஞர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – தாமரைக்குளம் ஏரியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இரண்டு இளைஞர்கள் படகில் பயணித்த நிலையில், படகில் இருந்த ஓட்டையுடாக நீர் கசிந்து படகு மூழ்கிய நிலையில், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை