சாணக்கியனைத் தாக்க முற்பட்ட இருவரைத் தாக்கிய மூவர் கைது

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எம்.பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 இற்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலை மறைவாகியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.

மட்டு தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் திங்கட்கிழமை அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் போக்குவரத்து பஸ்களைத்  தடுக்குமாறு  தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள், நடத்துநர்கள் மற்றும்  சாரதிகள் நடத்திய ஆர்ப்பாட்டதில் இரா. சாணக்கியன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு உரையாற்றிய சாணக்கியன் –

இந்த போக்குவரத்து அனுமதியில் ஊழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் அரசியல்கட்சி ஒன்று இருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில் அங்கு உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுது இது குறித்து இருவரையும் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேற்றியதுடைன் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.