பிரமிட் திட்டத்தை நடத்தியவரின் சொகுசு கார் பணம் வைப்பிலிட்டவர்களால் தீ வைத்து எரிப்பு!

பிரமிட் திட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நபருக்குச் சொந்தமான சொகுசு காரொன்று, சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஹூங்கம பிரதேசத்தின் ரன்ன, ஹெரோதர மாவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் பிரமிட் திட்டத்தில் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும், இருப்பினும் அதற்கான கொடுப்பனவோ பணமோ குறித்த நபரால் மீள வழங்காமை காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் காருக்குத் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தீயால் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் காரின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பிரிவுக்கு உட்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் ஹூங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.