சர்வதேச நாணய நிதிய மீளாய்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும்! நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்வு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளின் 80 வீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூதாட்ட மற்றும் பந்தய வரி திருத்தம் தொடர்பான விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.