68 வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்தவருக்கு கௌரவிப்பு!

தனது 68வது வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த திரு. வைத்திலிங்கம் கைலைநாதன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி – சுழிபுரம் மூலக் கிளையின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வானது ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து இறைவணக்கம், வரவேற்பு நடனம், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது நிகழ்வின் கதாநாயகனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விசாகப்பெருமாள் உமாபதி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. பாலச்சந்திரன், கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசு கட்சியின் சுழிபுரம் மூலக் கிளையின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.