வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு

வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக ஹட்சன் ரோய் இன்று (26) சுபநேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதேவேளை வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரியும், புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராகவும் பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால போராட்டங்கள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக நேற்றையதினம் காலை பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய அதிபர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.