பிரசவத்துக்கு பின்னரான உள பாதிப்பு தொடர்பில் விசேட பயிற்சிப்பட்டறைகள்

நூருல் ஹூதா உமர்

பிரசவத்துக்கு பின்னரான உள பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் மேற்பார்வை தாதிய உத்தியோகத்தர்கள் மேற்பார்வை பொது சுகாதார  மாதுக்கள்  மற்றும் பொது சுகாதார  மாதுக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி  ஏ.எச்.ரிஸ்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்  பிரதி பணிப்பாளர் எம்.பீ. அப்துல் வாஜித் கலந்து கொண்டதுடன் வளவாளராக கல்முனை பிராந்திய உளநல பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி  எம். ஜே.நௌபல் அவர்களும் கலந்துகொண்டதுடன் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.