கட்டுநாயக்க ஹினடியன பிரதேச கால்வாயில் பெருந்தெகையான கசிப்பு கைப்பற்றப்பட்டது!
கட்டுநாயக்கவின் ஹினடியன பிரதேச கால்வாய் பகுதியில் காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு காய்ச்சும் இடம் ஒன்றைச் சுற்றிவளைத்த கட்டுநாயக்க பொலிஸார் சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான கசிப்பு, கோடா மற்றும் வடிகட்டும் உபகரணங்களைக் கைப்பற்றியதுடன் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது, 405,000 மில்லி கசிப்பு, ஸ்பிரிட் அடங்கிய 12 கலன்கள் 52,92,000 மில்லி கோடா அடங்கிய 28 பீப்பாய்களையும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹினடியன பகுதியைச் சேர்ந்த 50 வயது மற்றும் 35 வயதுடைய இருவரையே பொலிஸாரால் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை