தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுப் பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) யாழில் இடம்பெற்றது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், இடம்பெற்ற இப் போராட்டமானது யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.












கருத்துக்களேதுமில்லை