வவுனியாவில் தங்கச்சங்கிலியை அறுத்த திருடர்கள்

வவுனியா – குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (02) இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, குருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நபர்களை சிலர் துரத்தி சென்றபோதும் அவர்களை பிடிக்க முயலவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.