கிளிநொச்சியில் தீ விபத்து – தென்னந்தோப்பு எரிந்து நாசம்

கிளிநொச்சி – கண்டாவளை – தர்மபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையில் தும்பு தொழிற்சாலை தொழில் நடவடிக்கை இடம்பெறாத நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதி மக்கள், இடர் முகாமைத்துவக் குழுவினர், கிளிநொச்சி தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.