யாழ்.பல்கலைக்கழக மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் இன்று (03) பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பல்கலைக்கழக முகாமைத்துவபீட இரண்டாம் வருட மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில் மாணவியின் சடலத்தைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை