கட்டணமானி பொருத்தப்படாத ஓட்டோக்கள் யாழில் அகற்றம்!

யாழ்.நகர்ப் பகுதியில், ஓட்டோத் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத ஓட்டோக்களை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் நகர் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டோக்களில்  கட்டணமானி பொருத்தப்படாமையால்  மக்களிடம்  அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகப்  போக்குவரத்துப் பொலிஸாருக்கு  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டா என யாழ்.மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் கடந்த இரண்டு மாத காலத்துக்கு முன்னரே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையிலேயே பொலிஸார் கட்டணமானி பொருத்தாத ஓட்டோக்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.