இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட 15-20 வரையிலான வயதினைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த யானையின் பின் வலக்கால் கண்ணிவெடி தாக்குதலில் சிதைவடைந்து காணப்படுவதாகவும் யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் நாளை இடம்பெறும் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.