தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – தாயும் மகனும் பலி – தந்தை படுகாயம்

கொழும்பு – மகரகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரைச் செலுத்திச் சென்ற 27 வயதுடைய இளம் பொறியியலாளரும், முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 55 வயதுடைய அவரின் தாயாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 58 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.