பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு…

சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன் தலைமையில் 06/08/2023 இன்று காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு மைதான கட்டடத்தில் இடம்பெற்றது.

ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தினை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக சமய செயற்பாடுகளில் அக்கறை காட்டிவரும் கழகமாகவும் பனங்காடு அக்னி விளையாட்டு கழகம் திகழ்கின்றது.

இச் சீருடைக்கான நிதி பங்களிப்பினை திரு.இளையதம்பி கவிராஜ் அவர்கள் வழங்கி இருந்தார்.

மேலும் இன் நிகழ்வில் அதிதியாக திரு.இளையதம்பி ரவிராஜ் அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு கழகத்தின் சீருடையினை உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

மேலும் விளையாட்டு கழகத்தின் ஆலோசகர் ரமேஸ், கழக இயன் மருத்துவர் ரா. கரன், ஆலையடி வேம்பு விளையாட்டு உத்தியோகத்தர் நிசாந்தான்,ஆசிரியர் வாசன், மனோராஜ் எனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான
திரு.கஜரூபன்,
திரு. சுரேஷ், காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்திற்க்கான சீருடைய இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.