யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

அனுராதபுரம் – மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய பி.சாரங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் வயல் நிலத்தைப் பாதுகாக்க வயலுக்கு காவலுக்குச் சென்ற வேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.