கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.