பனங்காடு அக்னி விளையாட்டுக் கழகத்துக்கு இணைந்த கரங்கள் அமைப்பால் சீருடைகள்!

பனங்காடு அக்னி விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பால் விளையாட்டு சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த சீருடை வழங்கும் நிகழ்வு அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன்  தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு மைதானக் கட்டடத்தில் இடம்பெற்றது.

ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கென ஓர் இடத்தை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக சமய செயற்பாடுகளில் அக்கறை காட்டிவரும் கழகமாகவும் பனங்காடு அக்னி விளையாட்டு கழகம் திகழ்கின்றது.

இந்தச் சீருடைக்கான நிதி பங்களிப்பை இளையதம்பி கவிராஜ் வழங்கி இருந்தார்.

மேலும் இந்த நிகழ்வில் அதிதியாக இளையதம்பி ரவிராஜ் கலந்து கொண்டு விளையாட்டு கழகத்தின் சீருடையை உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

மேலும் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் ரமேஸ், கழக இயன் மருத்துவர் ரா. கரன், ஆலையடி வேம்பு விளையாட்டு உத்தியோகத்தர் நிசாந்தான், ஆசிரியர் வாசன், மனோராஜ் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான
சுரேஷ், காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்துக்கான  சீருடையை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.