யாழில் பேருந்து மீது கல்லெறிந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது.

இதன்போது அங்கு நின்ற பெண்ணொருவர் பேருந்து மீது கல் வீசி தாக்கி பேருந்தை சேதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.