யாழில் 2 மாதத்தில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை – அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் போதைப் பாவணைக்கு 33 சிறுவர்கள் அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைப் பாவணைக்கு அடிமையாகி உள்ளனரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப் பொருளுக்கும், 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் , 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர்.

அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகிவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.