அம்பாறை பிரதேச செயலகங்களில் சிங்கள மொழியில் விண்ணப்பங்கள்! சிரமத்தில் தமிழ் மக்கள்

வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10ஆயிரம் ரூபா பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ் பேசும் மக்கள் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சகல வெளிநாடு தொழில்களுக்காக சென்று இருக்கும் பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரணங்கள் (10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதி) கொடுக்கப்படும் என கூறி இப்பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மூலம் விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

பின்னர் தமிழ் மொழி மூலம் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் என கூறி சில அலுவலகர்கள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு தனிச்சிங்கள மொழி மூல விண்ணப்ப படிவங்களை வழங்கி உடனடியாகப் பூர்த்தி செய்து தரவேண்டும் என வற்புறுத்துகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.