சாணக்கியனின் ஊழலை நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைமை வரும்! ஈ.பி.டி.பி. பதிலடி

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி)மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், சாணக்கியன் தனது வேட்டியை ஒவ்வொரு இடமாக வீசி தற்போது சூறை முள்பத்தையில் வீசியுள்ளார் எனவும் அதன் தாக்கம் இனி அவருக்கு தெரியவரும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

போராட்டத்தைப்பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவருக்கு  தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லையெனவும் அமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.