தப்போவ சரணாலயத்தில் பாரியளவில் தீ விபத்து!

 

தப்போவ சரணாலயத்தில் தீ பரவியுள்ளது. பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த தீயால் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

தப்போவ சரணாலயம் 12 ஆம் கட்டைப் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் பரவிய தீயினால் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி தினேந்திர ரனசிங்ஹ தெரிவித்தார்.

குறித்தப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக கருவலகஸ்வௌ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும் புத்தளம் நகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிபுரைக்கமைய புத்தளம் இராணுவப் பிரிவினர், புத்தளம் நகரசபை தீயனைப்புப் பிரிவினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இனைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த தீப்பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென்றும் மேற்படி சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.