யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது

பெரியப்பா முறையிலான ஒருவரால் 17 வயது சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் தங்கி இருந்த 17 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்று பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸ் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.