இலங்கையின் ஏனைய சமூகத்தினரோடு சரிசமமாக வாழ்வதற்கான போராட்டமே மலையக எழுச்சி பவனி!  அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ருவிட்

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று முடிந்த தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனியானது 200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருகை தந்தவர்களை நினைவுகூருவதாக உள்ளது என்பதை தான் நினைத்துப் பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் –

இலங்கையின் ஏனைய சமூகத்தினருடன் தாங்களும் சரிசமமாக வாழ்வதற்கான போராட்டத்தை நினைவுகூரும் விதத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு வார நடைபயணி முடிவுக்கு வந்துள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக வந்தவர்களை நினைவுகூரும் விதத்திலும் முன்னெடுக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்டவர்களை நினைவில் நிறுத்துகிறேன். – என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.