யாழ். வாலை அம்மன் சனசமூகநிலைய 80 ஆவது ஆண்டு நிறைவு அமுத விழா!

 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூகநிலைய 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாலை அம்மன் சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர்கள் வருகையோடு இரண்டு நாள்களும் வெகு சிறப்பாக இடம்பெற்றது .

அமுத விழா நிகழ்வின் போது, மேளதாள வாத்தியங்களுடன் விருந்தினர்கள் வரவேற்பு சிறப்பு நடனம், வரவேற்புரை , தலைமை உரை , சிறப்பு விருந்தினர்கள் உரை , அமுதவிழா நூல் வெளியீடு, வாலை அம்மன் சனசமூகநிலையத்தினரால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பண பரிசில்கள் வழங்கல், தென்னிந்தியதிரைப்பட பின்னணி பாடகர்களின் இசை நிகழ்வுகள் போன்றவை இடம்பெற்றன.

திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூகநிலைய 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட அமுத விழா நிகழ்வுகள் 12,13 இரண்டு நாள்களும் மாலை சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.