கைதிக்கு தொலைபேசி வழங்கிய யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது..T
யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15.08.2023) சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையின்போது, தொலைபேசி ஒன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்
சி.சி.டி.வி கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்றைய தினம் (16.08.2023) யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை