தேரர்களுக்கு விளக்கமளித்த செந்தில் தொண்டமான்!

திருகோணமலை நிலாவெளி இழுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இச்சம்பவத்தினால் இனமுருகல்கள் ஏற்படும் அபாயம் காணப்பட்டதால் குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நிறுத்தப்பட்டன.

இது தொடர்பாக பல அரசியல்வாதிகள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் ஆளுநருடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.

அதேசமயம் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய விகாராபதிகளைச் சந்தித்து இப்பிரச்சினை குறித்து அவர்களுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்தார்.

குறிப்பாக பலாங்கொட மிரிஷ் வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் விகாரபதி ‘ சங்கநாயக கரவிட்ட உயாங்கொட மைத்திரிமூர்த்தி மஹாநாயக்க தேரர்,அம்பருக்காஹரம விகாரை அமரபுற சமாகமே மூலஸ்தானய, அமரபுற மூலவன்சிக பாரஷவிய மூலஸ்தானய வெளித்தர பலப்பிட்டிய விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரர் ஆகியோரை சந்தித்து,விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆளுநர் தெளிவுப்படுத்தினார்.

இதன்போது நிலாவெளி இலுப்பை குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் பொழுது அங்கு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை ஏற்படுகின்றது. எனவே ஆளுநர் என்ற வகையில் இனமுறுகல் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக தன்னுடைய கடமையை செய்துள்ளதாக ஆளுநர் விளக்கம் அளித்தார் .

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இனங்களின் உரிமைகளையும் சமமாகப் பாதுகாக்க வேண்டியது எனது கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்கள், வட இந்தியர்கள், தென் கொரியா,தாய்லாந்து, பூட்டான்,ஜப்பான்,சீனா, நேபால், தாய்வான், இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் புத்த பெருமானை வழிபடுகின்றனர். அவருடைய போதனைகளை முழுமையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.இவ்வாறான சூழ்நிலையில் விகாரை அமைக்க கூடாது என எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கும் பொழுது அரசாங்கம் என்ற வகையில் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி சுமூகமான தீர்வு பெற்றுதருவதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.