குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாக விகாரையில் இன்று காலை மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த கலந்துரையாடல் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடைபெற்றது.

குருந்தூர் மலையில் நாளை வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.