அம்பலாங்கொடை டில்ஷானின் சகா விசேட அதிரடிப்படையினரால் கைது!

தென் மாகாணத்தில் மனிதப் படுகொலைகளை மேற்கொண்டுவரும் பாரிய குற்றவாளியின் சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யபடப்ட சந்தேகநபர் 43 வயதுடைய பயாகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்த நபர்களை சந்தேகநபர் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் வாழும் அம்பலாங்கொடை டில்ஷானின் பிரதான சகா என்பதுடன், இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடங்கொட அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் வாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.