வைத்தியர்கள் பிரச்சினைக்குத் தீர்வின்றேல் வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கை! ஹரித அலுத்கே எச்சரிக்கை

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக வைத்தியர்களை அச்சுறுத்தவே சுகாதார அமைச்சு முயற்சித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு உடனடி தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.