சாய்ந்தமருதிலுள்ள பெண்கள் அமைப்புக்களுக்கு ஜனாஸா அடக்கும் செயன்முறைக் கருத்தரங்கு!

 

நூருல் ஹூதா உமர்

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்கா மற்றும் வை.எம்.எம்.ஏ. – மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை சாய்ந்தமருது சைனிங் ஸ்டார் பெண்கள் அமைப்பின் காரியாலயத்தில் பெண்களுக்கான ஜனாஸா அடக்கும் முறை சம்பந்தமான செயன்முறை கருத்தரங்கு நடைபெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் கலாசார பிரிவின் தலைவர் எ.எம்.எ. அஸ்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக மாவடிப்பள்ளி வை.எம்.எம்.ஏயின் செயலாளர் ஏ. அஷ்ரப் (மௌலவி) கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது 14 ஆம் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். அபுல் ஹூதா , சைனிங் ஸ்டார் பெண்கள் அமைப்பின் தலைவி பிரோஸா காரியப்பர், செயலாளர் ஆயிஷா சித்தீக்கா, பொருளாளர் தஸ்னீம் காரியப்பர் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் கலாசார பிரிவின் துணைத் தலைவர் எ. எல். றில்வான், உயர் பீட உறுப்பினர் எம். முபீத் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது இஸ்லாமிய ஜனாஸா அடக்கும் முறை சம்பந்தமான பல விடயங்கள் செயல்முறை மற்றும் கேள்வி பதில் ரீதியாக கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு விரிவுரை அளிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்க விடயமாகும்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.