பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி!

 

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரல்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர்களான இ.ஜெரோன்சன், கி.சிவகுரு, பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.