வடக்கு – கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தரநியமனம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் டக்ளஸ் தேவானந்தா தகவல்

வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும், கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனமின்றி தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபித்ததுடன் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய நிலையில், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(05

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.