கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நிறைவு!

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலனும் (Chris Van Hollen) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் ஜனாதிபதியுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தனர்.

நேற்று இரவு 7.03 எனும் சுப நேரத்தில் ஸ்ரீ தலதா மாளிகையின் முன்பாக வடக்கு திசையை நோக்கிப் பயணித்த எசல பெரஹரா, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி ஊடாக பயணித்து ரஜ வீதியூடாகச் சென்றது.

வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண, பாதையின் இருபுறமும் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர்.

அதேநேரம், கண்டிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.