சமுர்த்தி வங்கி சங்கத்தின் செயலமர்வு சாய்ந்தமருதில்!

நூருல் ஹூதா உமர்

சமுர்த்தி வங்கிகளின் செயற்திறனை வலுவூட்டும் நோக்கில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸால் தயாரிக்கப்பட்ட சமுர்த்தி வங்கியின் செயற்திறன் மதிப்பீட்டு அறிக்கை கைந்நூல் பற்றி சாய்ந்தமருது பிரதேச செயலக வெளிக்கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியால வங்கி கண்காணிப்பு உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.ஹனீபா கலந்து கொண்டார்.

இதில் பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், கருத்திட்ட முகாமையாளர் எஸ்.நிபாயா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.ஹிதாயா உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச செயலக வெளிக்கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.