தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளியொருவர், திடீரென வழுக்கி விழுந்துள்ளார்.

இதனால் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு தோட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை செய்துகொடுக்கவில்லை என தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் உபாதை ஏற்பட்ட நபருக்கு அந்த நாளுக்கான சம்பளம வழங்குவதற்கும் தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவிக்கவில்லை என கண்டித்துள்ளனர்.

நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்தும், தமக்கான தொழில் உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்