கிளிநொச்சி தருமபுரம் பாடசாலை வளாகத்தில் தீ : பெறுமதி மிக்க பல மரங்கள் எரிந்து நாசம்

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் பாடசாலை வளாகத்தில் பின்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) விசமிகளால் தீவைக்கப்பட்டதன் காரணமாக பெறுமதி மிக்க பல மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீ பரவலை பாடசாலை பழைய மாணவர்கள் அதிபர் ஆசிரியர் பொலிஸார் மற்றும் கரைச்சிபிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தருமபுரம்  பொலிஸார் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக பல பகுதிகளில் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அநாவசிய தேவை கருதி தீ வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்பொழுது கடும் வரட்சியும் வெப்பமும் கடும் காற்றும் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் விழிப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.